
குளிர்பானம் குடித்த சிறிது நேரத்தில் சிறுமி உயிரிழந்ததால், அந்த குளிர்பான ஆலையை மூடி உணவுத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சென்னை பெசன்ட் நகரைச் சேர்ந்தவர்கள் சதீஷ் - காயத்ரி தம்பதி. இவர்களின் மகள்கள் அஸ்வினி(16), தரணி(13). வீ்ட்டின் அருகில் உள்ள மளிகைக் கடையில் 10 ரூபாய்க்கு விற்கப்படும் குளிர்பானத்தை, தரணி வாங்கிக் குடித்துள்ளார். பின்னர் வீட்டுக்கு வந்த தரணி, வாந்தி எடுத்து, மயங்கி விழுந்து விட்டார். சிறுமியின் மூக்கிலிருந்து ரத்தத்துடன் சளி வந்துள்ளது. உறவினர்கள் சிறுமியை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், சிறுமி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர் சிறுமியை மீண்டும் வீட்டுக்கு கொண்டு சென்றபோது, அவரது உடல் முழுவதும் நீல நிறமாக மாறியுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்