
கரோனா நிவாரண நிதியில் இருந்து கடந்த ஆண்டு கிருமிநாசினி, முகக்கவசம், கையுறைகள் வாங்கியதில் ரூ.11.55 லட்சத்துக்கு ஊழல் நடந்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், இதுதொடர்பாக ஊரக வளர்ச்சித் துறை செயலர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சேலம் மாவட்டம், ஓமலூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலரான சிவஞானவேல், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘2020-ம் ஆண்டு ஓமலூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில், கரோனா நிவாரண நிதியில் இருந்து கிருமிநாசினி, கையுறைகள் மற்றும் முகக்கவசம் போன்றவை அதிக விலைக்கு வாங்கப்பட்டுள்ளன. லிட்டருக்கு ரூ.76.50-க்கு விற்கப்பட்ட கிருமிநாசினி ரூ.280 ரூபாய் வீதம் 5 ஆயிரம் லிட்டர் வாங்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்