
திருவண்ணாமலை அடுத்த காட்டுவாநத்தம் கிராமத்தில் வேடியப்பன் எனும் பெயரில் வழிபாடு செய்யப்பட்டு வந்த கி.பி. 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஐயனார் சிற்பத்தை கண்டெடுத் துள்ளதாக மரபு சார் அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து திருவண்ணா மலை மரபு சார் அமைப்பு தலைவர் ராஜ் பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “திருவண்ணாமலை அடுத்த காட்டுவாநத்தம் கிராமம் ஏரிக்கரையில் உள்ள வேடியப்பன் கோயிலில் ஆய்வு செய்யப்பட்டது. 3 அடி உயரமும், 3 அடி அகலமும் கொண்ட சிலையில், கையில் செண்டு ஏந்திய நிலையில் ஐயனார், புடைப்பு சிற்பமாக இருப்பது கண்டறியப்பட்டது. ஐயனாரை, வேடியப்பன் என கிராம மக்கள் வழிபட்டு வந்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்