Thursday, August 19, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/20/large/706865.jpgகடைகள் வாடகை நிலுவை தொகை ரூ.38.70 கோடியாக உயர்வு - நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் உதகை நகராட்சி

நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சி மார்க்கெட்டில் மொத்தம் 1,587 கடைகள் உள்ளன. கடை உரிமையாளர்கள் வாடகை தொகையை செலுத்தாததால் நகராட்சி நிர்வாகத்துக்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டு, மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது.

இதையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு நகராட்சி ஆணையர் தலைமையில் வியாபாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதில், 1.7.2016-ம் தேதி முதல் வாடகை நிலுவை தொகை பாக்கி வைத்துள்ள உரிமையாளர்கள் ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேற்கூரை தகரத்தால் ஆன கடைகள் நகராட்சி நிர்ணயித்த வாடகையில் 75 சதவீதம், ஆஸ்பெட்டா சீட் உள்ள கடைகள் 60 சதவீதம், கான்கிரீட் போடப்பட்ட கடைகள் 50 சதவீத நிலுவை தொகையை கணக்கிட்டு செலுத்த வேண்டும். இல்லையென்றால் நகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...