Thursday, August 19, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/20/large/706883.jpgசிறுமியை ஏமாற்றி 5-வது திருமணம்

கும்பகோணம்: மதுரை மாவட்டம், மகபூபாளையத்தைச் சேர்ந்த சையத் அலி(40), கும்பகோணத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தபோது, உடன் பணிபுரிந்த 17 வயது சிறுமியை கடந்த ஜன.12-ல் கடத்திச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. போலீஸார் சையத் அலியை கடந்த 7 மாதங்களாக தேடிவந்தனர்.

இந்நிலையில், நாச்சியார்கோவிலில் நேற்று முன்தினம் சையத் அலியை போலீஸார் பிடித்து, போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர். சிறுமியை பெற்றோருடன் அனுப்பிவைத்தனர். விசாரணையில், சையத் அலி பெங்களூரு, மதுரையில் தலா ஒரு பெண்ணையும், கும்பகோணத்தில் 2 பெண்களையும் ஏமாற்றி திருமணம் செய்துகொண்டு, பணம் மற்றும் நகையை சுருட்டிக்கொண்டு கைவிட்டதும், தற்போது 5-வதாக இந்தச் சிறுமியை திருமணம் செய்துகொண்டதும் தெரியவந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...