
போலியாக பதிவு செய்யப்பட்டுள்ள ஆவணங்களை ரத்து செய்வதற்கு பத்திரப் பதிவுத் துறை தலைவருக்கு அதிகாரம் வழங்கும் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட உள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரி வித்தார். சட்டப்பேரவையில் பட்ஜெட் மீது நேற்று நடந்த விவாதம்:
தி.வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி): சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலக்காடுகள், ஆக்கிரமிப்பால் 6,500 ஹெக்டேரில் இருந்து 1,500 ஹெக்டேராக சுருங்கியுள்ளது. கடந்த ஆட்சியில் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்புள்ள சதுப்பு நிலக் காடுகள் தனியாருக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்