
அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டத்தின் கீழ், பயிற்சி பெற்ற 29 ஓதுவார்கள் உட்பட 58 நபர்கள் பல்வேறு கோயில்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதற்கான பணி நியமன ஆணையை முதல்வர் ஸ்டாலின் கடந்த வாரம்வழங்கினார். இந்நிலையில், பல்வேறு கோயில்களில் ஏற்கெனவே பல ஆண்டுகளாக பணியாற்றிவரும் அர்ச்சகர்களுக்கு பதிலாக, புதிதாகநியமிக்கப்பட்டவர்கள் பணியமர்த்தப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.
இதுதொடர்பாக சட்டப்பேரவையில் நேற்று விளக்கம் அளித்த முதல்வர் ஸ்டாலின், ‘‘ஏற்கெனவே பணியில் உள்ள அர்ச்சகர்கள் யாரும் பணியில் இருந்து அப்புறப்படுத்தப்படவில்லை. அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டத்தை சீர்குலைக்க சதி நடக்கிறது’’ என்று தெரிவித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்