
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணையின் கீழ் 2006-ல் முதல் பெண் ஓதுவா ராக நியமிக்கப்பட்டு, பல்வேறு காரணங்களால் பணியில் இருந்து விலகிய பெண், தனக்கு மீண்டும் ஓதுவார் பணி வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத் துள்ளார்.
திருச்சி செம்பட்டு அங்காளம் மன் கோயில் தெருவைச் சேர்ந்த வர் அங்கயற்கண்ணி(39). இவர், கடந்த திமுக ஆட்சியின்போது, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணையின் கீழ், 2006-ம் ஆண்டில் திருச்சி உறையூர் பஞ்சவர்ணசாமி கோயிலில் ஓதுவாராக நியமிக் கப்பட்டார். பின்னர் அவர் பல்வேறு காரணங்களால் பணியை தொடர முடியவில்லை. இந்நிலையில், அவர் தற்போது தனக்கு மீண்டும் ஓதுவார் பணி வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்