
சிறப்பு நீதிமன்றத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு எதிராக நடந்து வரும் வழக்கு விசாரணைக்கு அவர் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்கெனவே சென்னை மேயராக பதவி வகித்தபோது, சென்னை கிண்டி சிட்கோ பகுதியில் கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வீட்டு மனையை தன் மனைவியின் பெயருக்கு மாற்றியதாக பார்த்திபன் என்பவர் புகார் கொடுத்தார். இதன்படி கடந்த அதிமுக ஆட்சியில், மா.சுப்பிரமணியன், அவரது மனைவி காஞ்சனா ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்