
தஞ்சாவூரில் அனுமதியின்றி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதாக, பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை உட்பட 1,200-க்கும் மேற்பட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேகேதாட்டுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்து, தஞ்சாவூரில் நேற்று முன்தினம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. ஆனால், இதற்கு போலீஸார் அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து, தஞ்சாவூர் தெற்கு,மேற்கு, மருத்துவக் கல்லூரி ஆகிய 3 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், அனுமதியின்றி மாட்டு வண்டி ஊர்வலம் நடத்தியது, உண்ணாவிரதம் மேற்கொண்டது, கரோனா தொற்று பரவும் வகையில் செயல்பட்டது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உட்பட 1,260 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்