
‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் நடத்தும் சிறப்பு நூல் பகிர்வரங்கம் இன்று (ஞாயிறு) மாலை 6 மணிக்கு இணைய வழியில் நடைபெறுகிறது. இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டை கொண்டாடும் வகையில் நடைபெறும் இந்த சிறப்பு நிகழ்வில், ராணுவ விஞ்ஞானியும் அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் வி.டில்லிபாபு எழுதிய‘போர்முனை முதல் தெருமுனை வரை’ எனும் நூல் குறித்த சிறப்பு பகிர்வரங்கம் நடைபெறுகிறது.
பெங்களூருவில் உள்ள தேசிய வடிவமைப்பு, ஆராய்ச்சி மன்றத்தின் (என்டிஆர்எஃப்) இயக்குநரான டாக்டர் வி.டில்லிபாபு, அறிவியல் கருத்துகளை பரவலாக கொண்டுசேர்க்கும் நோக்கில், எளிய தமிழில் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். அவரதுஇந்த நூலை ‘தமிழ் திசை’ வெளியிட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்