
தமிழகத்தில் 1956-ல் தமிழ்மொழி ஆட்சி மொழி என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டது. இது 23.01.1957-ல் அரசிதழில் வெளியிடப்பட்டது. அந்த ஆண்டே அரசு அலுவலகங்களில் தமிழ்மொழி ஆட்சிமொழிக் குழு அமைக்கப்பட்டது. இருப்பினும் ஆட்சி அலுவலக விதிகள், விதித் தொகுப்புகள், நடைமுறை நூல்கள், படிவங்கள் ஆகிய அனைத்தும் ஆங்கிலத்தில் இருந்தன. அவற்றை உடனடியாகத் தமிழுக்கு மாற்றுவதில் சிக்கல்கள் ஏற்பட்டன.
எனவே இக்குழுவின் பணிகள் அனைத்தையும், தமிழ் வளர்ச்சித் துறை என்ற தனித் துறையை உருவாக்கி ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தை நிறைவேற்றிட அரசு முடிவு செய்தது. இதையடுத்து 1971-ல் தமிழ் வளர்ச்சி இயக்ககம் எனும் தனித்துறைத் தலைமை அலுவலகத்தை தோற்றுவித்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்