
மழை நீர் சேகரிப்பு தொட்டிக்காக பள்ளம் தோண்டியபோது ஏற்பட்ட மண் சரிவில் சிக்கிய தொழிலாளி, 3 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீட்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். முன்னதாக 2 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
பழைய வண்ணாரப்பேட்டை, தாண்டவராய முதலி தெருவில், தனியார் கண் மருத்துவமனை உள்ளது. இங்கு, அதே பகுதியைச் சேர்ந்த மணி என்பவர் தலைமையில், மழை நீர் சேகரிப்பு தொட்டிக்காக பள்ளம் தோண்டும் பணி நடந்தது. அந்த பணியில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சின்னத்துரை (22) அவரது நண்பர்களான அதே மாவட்டத்தைச் சேர்ந்த வீரப்பன் (55), ஆகாஷ் (22) ஆகியோர் நேற்று ஈடுபட்டிருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்