
முகாமில் வசிக்கும் இலங்கை தமிழர்கள், பாஸ்போர்ட் எடுத்து இலங்கை சென்று உறவினர்களை சந்தித்து விட்டு திரும்பும்போது மீண்டும் முகாம் பதிவு வழங்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம், மன்னார், திரிகோணமலை, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, முல்லைத்தீவு, கொழும்பு ஆகிய பகுதிகளில் இருந்து 1983-ம் ஆண்டு அகதிகளாக வந்த நூற்றுக்கணக்கான குடும்பங்களைச் சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள், கோவை மாவட்டத்தில், ஆழியாறு, கோட்டூர் பகுதிகளில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்