
விழுப்புரத்தில் திமுக கொடிக் கம்பம் நட முயன்ற பள்ளி மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவகாரத்தில், பந்தல்ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரத்தில் திமுக நிர்வாகி ஒருவரின் குடும்ப திருமண விழா கடந்த 20-ம் தேதி மாலை மாம்பழப்பட்டு சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இத்திருமண விழாவுக்கு உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கு அழைப்பு விடப்பட்டிருந்த நிலையில், அமைச்சர் வரவேற்புக்காக திருமண மண்டபத்துக்குச் செல்லும் சாலையில் திமுக கட்சி கொடி கட்டப்பட்ட இரும்புக் கம்பம் நடும் பணி நடைபெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்