
2018 முதல் 2021 ஏப்ரல் 12-ம் தேதி வரை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பொறுப்பு வகித்தவர் எம்.கே.சுரப்பா. இவரது பணிக்காலத்தில் ஆசிரியர்கள் பணி நியமனம் உள்ளிட்டவை தொடர்பாக ரூ.280 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதையடுத்து, ஓய்வுபெற்ற நீதிபதி பி.கலையரசன் தலைமையில் 7 பேர் கொண்ட விசாரணை ஆணையத்தை தமிழக அரசு கடந்த ஆண்டு நவ.11-ம் தேதி நியமித்தது. பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் மற்றும் புகார் அளித்தவர்கள் உள்ளிட்டோரிடம் ஆணையம் விசாரணை நடத்தியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்