
கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு கோவை விமானநிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்ட விவகாரத்தில் வேலுமணி உட்பட 50 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணியின் வீடு மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வழக்கு பதிவு செய்துள்ளனர். சோதனைக்கு பிறகு எஸ்.பி.வேலுமணி சென்னையிலிருந்து விமானம் மூலமாக நேற்று முன்தினம் கோவை திரும்பினார். அப்போது விமான நிலையத்தில் அதிமுகவினர் திரண்டு வரவேற்பு அளித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்