
வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை முன்னிறுத்தி தனித்துப் போட்டியிட்டால் ஊரகஉள்ளாட்சி தேர்தலில் 7 மாவட்டங்களில் அதிக இடங்களை வெல்லமுடியும் என்று பாமக தலைமை ஆணித்தரமாக நம்புகிறது. அதனால்தான் அதிமுக கூட்டணியில் இருந்து பாமக விலகியுள்ளது.
தமிழகத்தில் பிரிக்கப்பட்ட மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு 2 கட்டங்களாக வருகிறஅக்டோபர் 6, 9-ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று தமிழக தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்