
சிறுநீரக கல் வராமல் தடுக்கவும், கல்லை வெளியேற்றவும் அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கியூரி மருத்துவமனையின் தலைவர் மற்றும் சிறுநீரக நிபுணர் பி.பி.சிவராமன் தெரிவித்துள்ளார்.
‘தி இந்து’ ஆங்கில நாளிதழ், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் மற்றும் கியூரி மருத்துவமனை இணைந்து பொதுவான சிறுநீரக பிரச்சினைகள் தொடர்பான இணையவழி கருத்தரங்கை நேற்று நடத்தியது. கியூரி மருத்துவமனையின் தலைவர் மற்றும் சிறுநீரக நிபுணர் பி.பி.சிவராமன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் மருத்துவர்கள் எஸ்.மஞ்சு, கே.ரங்கா, மீனாட்சி சுந்தரம் மற்றும் மாலினி ராபர்ட்ஸ் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்