
சுருக்கு வலை பயன்படுத்துவது தொடர்பாக, புதுச்சேரி கடற்கரை மீனவர் கிராமத்தினர் இைடயே கடும் மோதல் ஏற்பட்டுள்ள சூழலில்,இந்த கலவரத்தை தூண்டும் வகையில் ஆயுதங்கள் தயாரித்து பதுக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 270 சுளுக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
புதுச்சேரியை அடுத்த வீராம்பட்டினம், நல்லவாடு, வம்பாக்கீரப்பாளையம் ஆகிய 3 மீனவ கிராமங்களுக்கு இடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலை பயன்படுத்துவது தொடர்பாக மோதல் ஏற்பட்டது. போலீஸார் துப்பாக்கி சூடு நடத்திநிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். அங்கு 144 தடை உத்தரவுபிறப்பிக்கப்பட்டு உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்