
சென்னை அடையாறு போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிபவர் புருஷோத்தமன். இவர் 8 முறை ‘மிஸ்டர் தமிழ்நாடு’ பட்டமும், அனைத்திந்திய காவல் பணித் திறனாய்வு போட்டியில் வெள்ளிப்பதக்கமும் பெற்றுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் நடைபெற்ற உலக ஆணழகன் போட்டிக்கான தகுதிப் போட்டியிலும் வெற்றி பெற்ற புருஷோத்தமன், வரும் அக்டோபர் 1 முதல் உஸ்பெகிஸ்தானில் நடைபெறும் உலக ஆணழகன் போட்டியில் கலந்து கொள்கிறார். தமிழக காவல் துறை சார்பில் இப்போட்டியில் பங்கேற்கும்முதல் காவலர் என்ற சிறப்பை இவர் பெற்றுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்