
ஆந்திர மாநிலம் - கிருஷ்ணாபுரம் அணையிலிருந்து, கடந்த இரு வாரத்தில் 3-வது முறையாக உபரிநீர் வெளியேற்றப்பட்டதால், திருவள்ளூர் மாவட்டத்தில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலங்கள் நீரில் மூழ்கின.
ஆந்திர மாநிலம் - கிருஷ்ணாபுரம் அணை, அம்மாநில பகுதியில் பெய்து வரும் கன மழையால் நிரம்பி வருகிறது. இதனால், கிருஷ்ணாபுரம் அணையிலிருந்து கடந்த மாதம் 25-ம் தேதி இரவு முதல், மறுநாள் அதிகாலை வரை, விநாடிக்கு 750 கன அடி வீதம் சுமார் ஐந்தரை மணி நேரம் உபரிநீர் வெளியேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கடந்த 1-ம் தேதி இரவு 9 மணி முதல், மறுநாள் அதிகாலை 4 மணி வரை, விநாடிக்கு ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்