
தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித், நேற்றுவிடைபெற்று பஞ்சாப் புறப்பட்டுச் சென்றார். புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி, வரும் 18-ம் தேதி பதவியேற்க உள்ளார்.
தமிழக ஆளுநராக கடந்த 2017அக்டோபரில் பன்வாரிலால் புரோஹித் பதவியேற்றார். 4 ஆண்டுகள் ஆளுநராக இருந்த நிலையில், கடந்த செப்.10-ம் தேதி பஞ்சாப் ஆளுநராக அவர் நியமிக்கப்பட்டார். நேற்று முன்தினம் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி ஆகியோர் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்