
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் பாலாற்றுப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் பாலாற்று கரை யோரம் வசிக்கும் கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தண்டோரா மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் வட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்