Wednesday, September 22, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/23/large/719035.jpgமகாத்மாவை வேண்டாம் என்றால் இந்தியா மட்டுமல்ல உலகத்துக்கே எதிர்காலம் இருக்காது: பாரதிய வித்யாபவன் தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் கருத்து

மகாத்மாவை வேண்டாம் என்றால், இந்தியா மட்டுமல்ல, உலகத்துக்கே எதிர்காலம் இருக்காது என கோவை பாரதிய வித்யாபவன் தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் பேசினார்.

சுதந்திர போராட்டத்தில் அகிம்சை வழியில் அறத்துடன் கலந்து களத்தில் நின்ற காந்தியடிகள், மதுரையில் 100 ஆண்டுகளுக்கு முன்பு செப்.22-ம் தேதி வேட்டியை மட்டுமே இனி தான் உடுத்துவதாக பிரகடனம் செய்தார். காந்தியடிகள் வேட்டி அணிந்த நூற்றாண்டு தினத்தை ராம்ராஜ் காட்டன் நிறுவனம், ‘காந்திய வேட்டி நூற்றாண்டு விழா’ என்ற பெயரில் திருப்பூரில் நேற்று விழாவாகக் கொண்டாடியது. இதில் ராம்ராஜ் காட்டன் குழுமத்தின் நிறுவனர் தலைவர் கே.ஆர்.நாகராஜன் வரவேற்றுப் பேசும்போது, ‘‘என் வாழ்க்கைப் போக்கில் நான் செய்த அனைத்து மாற்றங்களும் முக்கியமான நிகழ்வுகளால் ஏற்பட்டன. இம்முடிவுகள் ஆழ்ந்த ஆலோசனைக்குப் பிறகு எடுக்கப்பட்டவை. அதனால் நான் வருத்தப்பட வேண்டியதில்லை. என்னால் அவர்களுக்கு செய்ய முடிந்த ஒரே உதவி நான் எடுத்த முடிவுதான்" என காந்தியடிகளின் வார்த்தைகளை வேதமாகக் கொண்டு 1983-ம் ஆண்டு நான் வேட்டி வியாபாரத்தை தொடங்கினேன். நெசவாளர்களின் வாழ்க்கையை மனதில் கொண்டு, கடந்த 40 ஆண்டு காலமாக நெசவாளர்களை ஊக்குவித்து அவர்களது வாழ்வாதாரத்துக்கு வழிவகுத்து வேட்டியை இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு ஏற்றவாறு வடிவமைத்து, வேட்டியை இந்தியாவின் அடையாளமாக்கிய பெருமையையும், வெற்றியையும் காந்தியடிகளின் பாதங்களில் அர்ப்பணிக்கிறோம்’’ என்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...