
பொன்னேரி அருகே ரேஷன் கடையிலிருந்து ஆந்திர மாநிலத்துக்கு கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசியை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ரேஷன் கடையின் தற்காலிக ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே ஆலாடு கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் நேற்று முன்தினம் இரவு பொது விநியோகத் திட்டத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் அரிசியை, ஆந்திர மாநிலத்துக்கு கடத்த முயல்வதாக குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்