
தமிழகம் முழுவதும் நேற்று நடத்தப்பட்ட மெகா முகாம்களில் ஒரேநாளில் 28 லட்சத்து 36,776 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதிகபட்சமாக சென்னையில் 1 லட்சத்து 85,370 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
முகாமையொட்டி முன்கூட்டியே 30 லட்சம் தடுப்பூசிகளை அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பப்பட்டிருந்தன. காலை 7 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெற்ற முகாம்களில் மக்கள் ஆர்வமாக வந்து தடுப்பூசிகளை போட்டுக் கொண்டனர். பல இடங்களில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்