
கரோனா தொற்று பாதித்து இறந்தவர்களின் குடும்பத்துக்கு, ‘கரோனாவால் இறந்தவர்’ என சான்றிதழ் வழங்கப்படாததால், அவர்களின் குடும்பத்தினரால் உரிய நிவாரண உதவிகளை பெற முடியவி்ல்லை எனக் கூறி ஸ்ரீராஜலட்சுமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ‘உச்ச நீதிமன்றஉத்தரவின் அடிப்படையில் கரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இறப்பு சான்றிதழ் வழங்குவது தொடர்பாக மத்திய அரசு விதிகளை வகுத்துள்ளது. அந்த விதிகளின் அடிப்படையில், மாவட்டஅளவில் கூடுதல் ஆட்சியர்,தலைமை மருத்துவ அதிகாரி உள்ளிட்டோர் அடங்கிய குழுவைஅமைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன’ என கூறப்பட்டிருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்