
சமூக வலைதளங்களில் ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிக்கும் மோசடி கும்பலிடம் சிக்காமல் இருக்க சைபர் கிரைம் போலீஸார் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
சைபர் கிரைம் மோசடிகள் நூதன முறையில் தொடர்ந்து நடந்து வருகின்றன. குறிப்பாக பெண்கள் பெயரில் முகநூலில் கணக்கு ஒன்றை உருவாக்கி ஆண்களை குறிவைத்து பணம் பறிக்கும் கும்பல் குறித்து மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸாருக்கு புகார்கள் அதிகஅளவில் வருகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்