
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி வரும் 26-ம் தேதி முதல் பிரச்சாரம் தீவிரமடைய உள்ள நிலையில், கரோனா 3-வது அலையைத் தடுக்க உரிய கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, வேட்பாளருடன் 4 பேர் மட்டும் செல்ல வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்திஇருந்தது. எனினும், இதை தமிழகத்தில் செயல்படுத்தவில்லை. கூட்டம் கூட்டமாக, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும், முகக்கவசம் அணியாமலும் வேட்பாளர்கள் பலர் பிரச்சாரம் செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்