
புதிதாக அமைக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு எடுத்து ஒருங்கிணைந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து கள்ளக்குறிச்சி மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டது. இந்த மாவட்டத்துக்கான ஒருங்கிணைந்த மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் கட்ட, வீரசோழபுரத்தில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 35 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அந்தநிலத்துக்காக அறநிலையத் துறைக்கு இழப்பீடாக ரூ.1.98 கோடி வழங்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்