
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்காக புதுச்சேரியில் வைக்கப்பட்ட சிலைகள், பழைய நீதிமன்றம் எதிரே நேற்று கடலில் கரைக்கப்பட்டன.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 10-ம் தேதி கொண்டாடப்பட்டது. கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், புதுச்சேரி அரசு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கவும், ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் அனுமதி வழங்கியிருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்