
தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் உள்ளாட்சி அமைப்புகள் திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட விஷயங்களுக்கு ஸ்டார் மதிப்பீடு பெறுவது கட்டாயமாக்கப் படவுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
தூய்மை இந்தியா (ஸ்வச் பாரத்) திட்டத்தை கடந்த 2014-ம்ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்தார். அந்தத் திட்டத்தின் கீழ் பெரும்பாலான பணிகள் நடைபெற்றுள்ள நிலையில் தூய்மை இந்தியா 2.0 திட்டத்தை மத்திய அரசு விரைவில் தொடங்க உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்