
புதுடெல்லியில் மத்திய அரசு தமக்கு ஒதுக்கியுள்ள வீட்டை திருவள்ளூர் தொகுதி மக்களின் பயன்பாட்டுக்காக காங்கிரஸ் எம்பி ஜெயக்குமார் அளித்துள்ளார்.
திருவள்ளூர் எம்பியாக இருப்பவர் காங்கிரஸ்கட்சியை சேர்ந்த ஜெயக்குமார். இவருக்காகபுது டெல்லியில் மத்திய அரசு ஒதுக்கியுள்ள வீட்டுக்கு, திருவள் ளூர் இல்லம் என்று பெயர் சூட்டி, திருவள்ளூர் தொகுதியிலிருந்து பணி, கல்வி நிமித்தமாகவோ, சுற்றுலாவுக்காகவோ புதுடெல்லி செல்பவர்கள், அதிக கட்டணம் செலுத்தி விடுதிகளில் தங்குவதை தவிர்க்க ஏதுவாக திருவள்ளூர் தொகுதி மக்களின் பயன்பாட்டுக்காக அளித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்