
நாட்டின் பழமையான மற்றும் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி (டிஎம்பி) தனது நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களை தூத்துக்குடியில் நேற்று முன்தினம் தொடங்கியது.
மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் விழாவை தொடங்கி வைத்தார். வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கே.வி.ராமமூர்த்தி, நிர்வாக குழு உறுப்பினர்கள், அஞ்சல் துறையின் போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ஜி.நடராஜன், ஐபிஓஎஸ், அரசுத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்