
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை இடி, மின்னலுடன் சாரல் மழை பெய்தது. தரமணியில் 34 மிமீ மழை பதிவாகியுள்ளது.
சென்னை, புறநகர் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது லேசான தூறல் மழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று மாலை மாநகர், புறநகர் பகுதிகளில் கருமேகங்கள் சூழ்ந்தன. இதனால் மாலை 4.30 மணிக்கே இருள் சூழ்ந்து காணப்பட்டது. வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்