
குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய, தன்னார்வலர்களை இணைத்து வார்டு வாரியாக குழந்தைகள் பாதுகாப்பு குழுக்களை ஏற்படுத்த மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் சிறுவயதில் திருமணம், பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள், குழந்தை தொழிலாளர்களாக பணியாற்றுவது உள்ளிட்ட பிரச்சினைகளில் இருந்து பாதிக்கப்பட்ட குழந்தைகளை மீட்டு தேவையான சட்ட, மருத்துவ உதவிகளை வழங்கும் பணிகளை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்