
தாம்பரம் அருகே டிரெய்லர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பொறியியல் பட்டதாரிகள் உட்பட 5 பேர் நேற்று உயிரிழந்தனர்.
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தாம்பரம் அருகே புதுபெருங்களத்தூரில் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் நுழைவு வாயிலில் கட்டுமானத்துக்கான இரும்பு கம்பிகளை ஏற்றி வந்த டிரெய்லர் லாரி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்