
சென்னையில் முதன்முதலாக திரைப்படம் திரையிடப்பட்ட பாரம்பரிய கட்டிடமான விக்டோரியா பப்ளிக் ஹாலை ரூ.15 கோடியில் சீரமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
சென்னை மாநகரப் பகுதியைச் சேர்ந்த பொதுநலனில் ஆர்வம் கொண்ட செல்வந்தர்கள் ஒன்று கூடி, மாநகருக்கான நிகழ்ச்சி அரங்கத்தை அமைக்க 1882-ம் ஆண்டு திட்டமிட்டனர். அந்த அரங்கத்தை அமைக்க அறக்கட்டளை (பின்னாளில் அது விக்டோரியா நினைவு அறக்கட்டளை என பெயர் மாற்றமடைந்தது) ஒன்று தொடங்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்