Sunday, September 26, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/27/large/720365.jpgகரோனா தடுப்பூசி செலுத்தியோருக்கு மட்டும் ஒகேனக்கல்லில் இன்று முதல் அனுமதி: அருவி, ஆற்றில் குளிக்க அனுமதியில்லை

உலக சுற்றுலா தினமான இன்று (27-ம் தேதி) முதல் கரோனா தடுப்பூசி இரு தவணை செலுத்திய பயணிகள் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வர அனுமதியளிக்கப்படுகிறது. அதே நேரம் அருவி மற்றும் ஆற்றில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதியில்லை.

இதுதொடர்பாக தருமபுரி ஆட்சியர் திவ்யதர்சினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதி மக்களின் வாழ்வாதாரம், பொதுமக்களின் சுற்றுலா ஆர்வம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தமிழக அரசின் கரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி உலக சுற்றுலா தினமான இன்று (27-ம் தேதி) முதல் நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஒகேனக்கல்லில் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...