
விழுப்புரம் மாவட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் உள்ளிட்ட பதவி கள் ஏலம் விடப்படுவதன் பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளன.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சிஒன்றியத்துக்கு உட்பட்ட பொன்னங்குப்பம் ஊராட்சி துத்திப்பட்டு கிராமத்தில் கடந்த 15-ம் தேதி ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ரூ.13 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும், 6 வார்டு உறுப்பினர்கள் பதவியும் ரூ.30 ஆயிரம் வரை ஏலம் போனது.கடந்த 19-ம் தேதி ஒன்றிய கவுன்சிலர்பதவியும் ரூ. 20 லட்சத்து 8 ஆயி ரத்து 100-க்கு ஏலம் விடப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்