
தகவல் உரிமை சட்டத்தின்படி ஆன்லைன் வாயிலாக, தகவல்பெற விண்ணப்பிக்கும் வசதியைஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
பேரவையில் நேற்று கேள்விநேரத்தில், பேரவை காங்கிரஸ்கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை பேசும்போது ‘‘தகவல்அறியும் உரிமைச் சட்டம், ஐக்கியமுற்போக்கு கூட்டணி ஆட்சியில்கொண்டுவரப்பட்டது. அப்போதைய முதல்வர் கருணாநிதியும்அதை வரவேற்று, சட்டத்தை அமல்படுத்தினார். தொகுதிதோறும்,தகவல் ஆணையத்தின் கிளை அலுவலகம் அமைத்தால், மக்களுக்கு வசதியாக இருக்கும்’’ என்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்