
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர் ஜவாஹிருல்லா பேசும்போது, ‘‘தமிழகத்தில் 7,500-க்கும் மேற்பட்ட வக்புகள் உள்ளன. அவற்றுக்கு சொந்தமான சொத்துகள் தற்போது எங்கு உள்ளன, குத்தகை, வாடகைதாரர்கள் யார் என்ற விவரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்த விவரங்கள் எதுவும் இணையதளத்தில் இல்லை.வக்பு சொத்துகள் வகை மாற்றம்செய்வதற்கான தடையில்லா சான்று அதிகாரத்தை மாவட்ட வக்புஆய்வாளர், கண்காணிப்பாளர்களிடம் இருந்து மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?’’ என்றார்.
அதற்கு பதில் அளித்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்