
செம்பரம்பாக்கம் ஏரியில் தொழிற்சாலை திரவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறியும் வகையில், அங்குள்ள மண் படிவுகளை ஆய்வு செய்யுமாறு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகரின் முக்கிய நீராதாரமான செம்பரம்பாக்கம் ஏரியில் குப்பை, தொழிற்சாலை திரவக் கழிவுகள் கொட்டப்படுவதாக நாளிதழ் ஒன்றில் கடந்த ஆண்டு செய்தி வெளியானது.அதனடிப்படையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்