
பொதுமக்கள், அதிகாரிகள், அலுவலர்கள் ஒத்துழைப்பால் `மெகா தடுப்பூசி முகாம்' மாபெரும் வெற்றிபெற்றுள்ளதாகவும், வாரந்தோறும்இதுபோன்ற முகாமை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்தாகவும் தலைமைச் செயலர் வெ.இறையன்பு தெரிவித்தார்.
கரோனா பரவல் 3-ம் அலையைத்தடுக்க, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, அண்டை மாநிலத்தில் கரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில், எல்லையோர மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்தியுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்