
நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிறப்பாகப் பணியாற்றும் செவிலியர்களை கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருதை மத்திய சுகாதாரத் துறை வழங்கி வருகிறது.
அதன்படி, 2020-ம் ஆண்டுக் கான விருது தமிழகத்தில் 3 பேர்உட்பட 51 செவிலியர்களுக்கு அறிவிக்கப்பட்டது. சென்னை கே.கே.நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர் ஒ.வி.உஷா, 1,000-க்கும்மேற்பட்ட பிரசவங்கள் பார்த்துள் ளார். மேலும், சுகாதார திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதற்காக விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்