
தமிழக தலைமைச் செயலர் வெ.இறையன்பு, அவ்வப்போது பல்வேறு அறிவுறுத்தல்களை நேரடியாகவே மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகளுக்கு கடிதங்கள் மூலம் அளித்து வருகிறார். அந்த அடிப்படையில், மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
அரசு நடவடிக்கைகளுக்குப் புத்துயிர் பாய்ச்ச வேண்டும் என்ற அடிப்படையில் உங்களை தமிழக அரசு நியமித்துள்ளது. இன்று, முதல்வர் தனிப்பிரிவுக்கு மனுக்கள் வந்து குவிந்தவண்ணம் இருப்பதை நான் காண்கிறேன். ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ என்ற திட்டத்தின் மூலம் பெற்ற அனைத்து மனுக்களின் மீது நூறேநாட்களில் எடுத்த நடவடிக்கை களையும், மக்களின் வெகுநாட் களாக தீர்க்காமல் இருந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்ட அணு குமுறைகளையும் கண்டு மக்கள் அளவு கடந்த நம்பிக்கையி்ன் அடிப் படையில் இங்கு குவிகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்