
கோவையில் இஎம்எஸ் (எக்ஸ்பிரஸ் மெயில் சர்வீஸ்) எனப்படும் ‘ஸ்பீட் போஸ்ட்’ சேவை இன்று முதல் 35-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
நாட்டில் கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றிவரும் இந்திய அஞ்சல் துறையின் கீழ், ஒரு லட்சத்து 55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அஞ்சலகங்கள் மற்றும் கிளை அஞ்சலகங்கள் உள்ளன. அஞ்சல் சேவை தவிர்த்து, சரக்கு பார்சல், சிறுசேமிப்பு, அஞ்சல் வங்கி, ஆதார், தங்க காசு மற்றும் தங்க பத்திரம் விற்பனை உள்ளிட்ட சேவைகளையும் இணைத்து வழங்கி வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்