
வாணியம்பாடி முன்னாள் கவுன்சிலர் கொலை வழக்கில் தேடப்பட்ட 7 பேர் நீதிமன்றங்களில் நேற்று சரணடைந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்தவர் வசீம் அக்ரம்(40). நகராட்சி முன்னாள் கவுன்சிலர், மனித நேய ஜனநாயக கட்சியின் முன்னாள் மாநில துணைச் செயலாளராக இருந்தார். கடந்த 10-ம்தேதி இரவு வாணியம்பாடி ஜீவா நகரில் உள்ள மசூதியில் தொழுகை நடத்தி விட்டு அவரது வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது காரில் வந்தஒரு கும்பல் அவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்