
கோடநாடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின்செல்போன் உரையாடல்களை தனிப்படை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் 2017 ஏப்.24-ல் கொள்ளை முயற்சி நடந்தது. இதில், காவலாளி ஓம்பகதூர் (50) கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜிஜின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி மற்றும் குட்டி என்கிற பிஜின் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்